இணைய உலகில் தமிழ் வளர சிங்கப்பூர் மணியம் கோரிக்கை! Part 2
Jun 02, 2008•49 min
Episode description
Covered Exclusively by http://www.adhikaalai.com
சிங்கப்பூர் பிரமுகரான மணியம் உலக தமிழிணைய அமைப்புகளோடு
தொடர்புடையவர். குறிப்பாக 1997ல் இணைய வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி
நிறுவனமான ஐடிஎன்ஸ்-ல் தமிழ் குழுமம் அமைக்க ஆலோசனை கூறி அமைக்கக் காரணமாக இருந்தார்.
இணைய பெயர் மற்றும் எண் அளிக்கும் ஆணையம்
inet- www.isoc.org - இணைய கழகம் போன்றவற்றில் முக்கிய பொறுப்புவகிப்பவர்.
1998ல் இணைய வர்த்தகம் குறித்த அமைப்பான இடென்ச் சிங்கப்பூரில் நிறுவப்பட்டது.
இந்தியாவிற்கான இணைய வர்த்தக மையம் உருவாக காரணமானவர்.
1999ல் சிங்கப்பூர் அரசின் பிரதிநிதியாக தமிழகத்தில் நடைபெற்ற தமிழ்நெட் 99
மாநாட்டில் பேராசிரியர் நா.கோவிந்தசாமியுடன் கலந்துகொண்டார்.
2000ம் ஆண்டு ஜப்பானின் யோகோஹாமாவில் நடைபெற்ற இணைய மாநாட்டில்
இவர் கலந்துகொண்டபோது தமிழகத்திலிருந்து துணைவேந்தர்கள் பேரா.ஆனந்தகிருஷ்ணன்,
பொன்னவைக்கோ,பேரா.சந்திரபோஸ் போன்றோரும் கலந்து கொண்டபோது உருவானதுதான்
உத்தமம் எனும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப அமைப்பு!
2002ல் சிங்கப்பூரின் பிரதிநிதியாக அமெரிக்காவில் நடைபெற்ற உத்தமம் மாநாட்டில்
கலந்துகொண்டவர். மின்க் எனும் அமைப்பில் இந்தியமொழிகள் தலைவராகவும் திரு.மணியம் இருந்து வருகிறார்.
சமீபத்தில் தமிழகம் வந்திருந்தபோது அவரை அதிகாலை சந்திக்க வேண்டும் என்று
தெரிவித்தபோது பல்வேறு பணிகளுக்கிடையிலும் நேரம் ஒதுக்கி பொறுமையாக
நம் கேள்விகளுக்கு விளக்கமாகவே பதிலளித்தார். அவரின் நேர்காணல்:
For the best experience, listen in Metacast app for iOS or Android
