14 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு - podcast episode cover

14 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு

May 10, 202424 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

14 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு 14,00,000 1.4 மில்லியன் ஆண்டுகள் பழமையான கல் கருவிகள் ஐரோப்பாவில் மனிதர்களின் ஆரம்ப சான்றுகள் உள்ளன. மனிதர்கள் நிமிர் நிலையில் உள்ள உள்ளுறுப்புகள் காலந்தோறும் மேம்பட்டு வருகின்றன என்பது நாம் அறிந்த ஒன்று ஆகும். இது குறித்து நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளுறுப்புகள் மாறிவிடும் ஒன்று என பதிவிலும் தொல்காப்பியம் செய்யுள் இயலில் கூறப்பட்டுள்ளன. 'நிமிர்' குறித்து தொல்காப்பியம் பொ.அ . 1429. செய்யுள் இயல்:484 "அடி நிமிர் கிளவி ஈர் - ஆறு ஆகும் ! அடி இகழ்ந்து வரினும் கடி வரை இன்றே" முகம் என்னும் சொல் 'முகு' என்ற அடியினின்று பிறந்தது. அகநிலைகள் ஆறும் வருமாறு 1. நான்கிதழ் உள்ள மூலம் - 2. ஆறிதழ் உள்ள கொப்பூழும் 3. பத்து இதழ் உள்ள மேல் வயிறு 4. பன்னிரண்டு இதழ் உள்ள நெஞ்சமும் 5. பதினாறு இதழ்கள் கொண்ட மிடறும் 6. இரண்டு இதழ்கள் உள்ள புருவ நடுவும் ஆகிய ஆறும் ஆறு மூல ஆதாரங்கள் எனப்படும்.. புவி' தோற்றத்திலும் " 'பு'திய 'வி'சை " ஆகும்‌. உலகம்‌ இரு மடங்கு நீரின் சுழற்சியில் உள்ளது. வான வெளியில்‌ அமைந்த அண்டங்களில்‌ கதிரவன், தீப்‌ பிழம்பான அண்டத்தின் துண்டே. 'முன்னீர்‌ என்று ஓதி நிலத்திற்கு முன்னாகிய நீர்‌ நீர்‌ வெள்ளத்தில்‌ '- என உரைத்தனர். தொல்காப்பியம்-எழுத்து அதிகாரம் 3. பிறப்பியல் நூ.பா.எண்.84. 'அகிலமே அகரமாக' கரந்துறையில் அ-அண்ட சரசாரங்களில் கி-கிட்டும் ல-லட்சக்கணக்கான பொருட்கள் யாவும் மே-மேன்மை பெறும். அ-அகர எழுத்தில் க-கரத்தில் பற்றி ர-ரகசிய கோடுகளில் மா-மாந்தர்களாக எழுத்தறிவு பெற்று க-கற்போம்!, கற்பிப்போம், கடமைதனை செய்வோம். கரந்துறையில் அ-அறிவு ஆ-ஆதாரம் இ-இன்பம் ஈ-ஈகை உ-உண்மை ஊ-ஊன்றுகோல் எ-எழுத்து ஏ-ஏற்றம் ஐ-ஐவகை ஒ-ஒரு பதம் ஓ-ஓராயிரம் ஔடதம் என்று ' 12 ' உயிர் எழுத்துக்களின் ஓசையை ஒலியன்களை அதனதன் குரல் ஒலி நிலை உணர்வோம், உணர்த்துவோம். உயிர் எழுத்துக்களின் பிறப்பு 84. 'அவ்வழிப் பன்னீ ருயிரும் தந்நிலை திரியா மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்.' மேற்கூறிய முறையில், பன்னிரண்டு உயிர்களும், தத்தம் நிலைமையில் குரல் வளையில் தோன்றிய காற்றால், ஒலிக்கும். பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பொதுவாகக் குரல் வளையில் தோன்றும் என்பதாம். எ.கா: அகிலம் ஆனது, இயற்கை ஈன்றெடுத்தவையாகும். உன்னதமாக ஊரெங்கும், எண்ணத்தால் ஏற்றமிகும். ஐவகையில்,(நீர்,நிலம்,காற்று,நெருப்பு, பேரண்டம்) ஒரு பதமாகி ஒராயிரக்கணக்கில் ஔதகமிளிர்கிறது. இந்த பன்னிரண்டு எழுத்துக்களும் தமிழ் எழுத்தில் உயிரெழுத்தாகி ஊரெங்கும் பரவுகிறது. 85. 'அவற்றுள். அ, ஆ, ஆயிரண்டு அங்காந்து இயலும்.' மேற்கூறப்பட்ட உயிர் எழுத்துகள் பன்னிரண்டனுள், 'அ, ஆ' , எனும் அந்த இரண்டு எழுத்தும், வாயைத் திறந்து கூறும் எழுத்துக்களாக பிறக்கும். அ, ஆ, இரண்டையும் ஒலிப்பதற்கு வாயைத் திறத்தலே போதுமானது. 86. 'இ, ஈ, எ.ஏ, ஐ யென இசைக்கும் அப்பால் ஐந்தும் அவற்றோரன்ன அவைதாம், அண்பல், முதல்நா, விளிம்புறல் உடைய.' 'இ, ஈ, எ, ஏ, ஐ' என்று ஒலிக்கும், அப்பகுதிப்பட்ட ஐந்து எழுத்துக்களும், மேற்கூறப்பட்ட 'அ, ஆ' வைப்போன்று வாயைத் திறக்க உண்டாகும். எனினும், அவ்வைந்தும், பல்லினடியும், அடிநா ஓரமும், பொருந்தப் பிறக்கும் தன்மையதாகும். 87. 'உ, ஊ, ஒ, ஓ ஔ என இசைக்கும் அப்பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்' 'உ, ஊ, ஒ, ஓ, ஔ' என்று சொல்லப்பட்டு ஒலிக்கும், இந்த ஐந்து எழுத்துகளும் இதழோடு குவித்துக் கூற பிறக்கும், இவற்றை ஒலிப்பதற்கு வாயைத் திறத்தலோடு உதடுகளையும் குவித்தல் வேண்டும். 88. 'தத்தந் திரிபே சிறிய வென்ப' உயிர்களும் மெய்களும் ஒவ்வொரிடத்துப் பிறப்பனவற்றை அறிவோம். குறிலில் குறைந்து நெடிலில் நீட்டும் எழுத்தையும் நுண்ணுணர்ந்து ஆராயுமிடத்தும் அதனதன் வேறுபாடுகள் சிறியன உடையது என்பதையும் அறிவோம். நாக்கில் சிறக்கும் குறில் நெடில் வாக்கில் மலரும் சொற்களே. நான்கு சுழற்சியில் பெரும் சுற்று நன்கு வகுத்திடும் ஆரம்பத் தொடர் அன்ன முதலாய் ஆற்றல் பெருகிடும் நன்று பயின்ற நாவிதழ் கூறிடும். கூறிடும் அகநிலை ஆறிதழ் வகுத்திடும் மாறிடும் குறியீட்டு சதுர உறுதியில் வேறிடம் சென்றிடும் கொப்பூழ் வயிறு ஊறிடும் நெஞ்சம். நெஞ்சம் நிறைந்த மிடறும்(கழுத்து) ஒலித்திட தஞ்சம் அடைந்து ஐம்புலன் யாவும் எஞ்சிய பகுதி காத்திடும் ஆரச்சுற்று மஞ்சம் அடித்தளம் ஆற்றிடமே நன்று. நன்றே பயின்றிடு நால்வகை அறிந்திடு அன்றே ஆற்றிடும் பங்கில் வகித்திடும் ஊன்றுகோல் கொள்ளிடம் என்றும் சொல்லிடம் சான்றுகளே சான்று சேவையே தேவை.
For the best experience, listen in Metacast app for iOS or Android